தேவையான பொருட்கள்
:
Ø மைதா - ஒரு கப்
Ø வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
Ø தயிர் - 2 டீஸ்பூன்
Ø பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன்
Ø பேக்கிங் பவுடர்
- அரை டீஸ்பூன்
Ø கொத்தமல்லித்தழை
- சிறிதளவு
Ø உப்பு - தேவையான அளவு
செய்முறை :
Ø ஒரு கிண்ணத்தில் மைதா,
உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.
Øஇதனுடன் உருக்கிய
வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு
தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
Ø ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக
உருட்டி, நீளமான சப்பாத்தி
போல தேய்த்துக்கொள்ளவும்.
Ø தவாவை சூடாக்கி பிறகு
சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன்
அதன்மீது சிறிது தண்ணீரை தொட்டு தடவிக்கொள்ளவும்.
Ø பின் தண்ணீர் தடவிய
பகுதியை தவாவில் படும்படி போட்டு 5 நிமிடம் இருபுறமும்
வேக வைத்து எடுக்கவும்.
Ø எடுத்த பின் எண்ணெய்
தடவி பரிமாறவும்.
Comments
Post a Comment