மணத்தக்காளி வற்றலை வைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
- மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன்,
- புளி - எலுமிச்சைப் பழ அளவு,
- வெந்தயம்,
- கடலைப்பருப்பு,
- கடுகு - தலா அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் - 2,
- பெருங்காயத்தூள் - சிறிதளவு,
- சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
- கறிவேப்பிலை - சிறிதளவு,
- எண்ணெய் - 50 மில்லி,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.
* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:
Comments
Post a Comment